ஓவியர் ஹெல்மன் வரைந்த, காண்பவரை மெய்சிலிர்க்க வைக்கும், “கடவுள், மூடியிருக்கும் கதவைத்
தட்டிக் கொண்டிருப்பது” போன்ற ஓவியம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. தத்துவரூபமான
அந்த ஓவியத்தைப் பார்த்த எல்லாரும் பரவசமடைந்தனர். ஆனால் ஒரேயொருவர் மட்டும் குறை சொன்னார்
: “ஓவியத்தின் கதவில் சாவி இல்லையே. சாவியில்லாதக் கதவை எப்படித் திறப்பதாம்”? அதைக்
கேட்ட ஹெல்மன் புன்னகையுடன் சொன்னார் : “தம்பி, சாவித்துவாரமும் சாவியும் வெளியில் இல்லை.
உள்ளேதான் இருக்கிறது. உள்ளே இருக்கும் நீ தான் கதவைத் திறக்க வேண்டும்” என்று. ஓவியர்
மேலும் சொன்னார் : “தரிசனம் கதவைத்தான் தட்டும். தரிசனம் பெற வேண்டியது நீர்தாம்” என்று.
ஆம்.
“அக்கம்பக்கத்தில் இல்லை அகவிடுதலை. அது உன் கையில் இருக்கிறது”