2010-05-13 15:05:21

ஒவ்வொரு கத்தோலிக்கத் துறவியும் இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கான வாயப்புப் பெற வேண்டும் - CRI செயலர்


மே13,2010 ஒவ்வொரு கத்தோலிக்கத் துறவியும் இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கான வாயப்புப் பெற வேண்டும் என்று CRI என்ற இந்திய துறவற சபைகளின் கூட்டமைப்பு கூறியது.

மே16, வருகிற ஞாயிறன்று கடைபிடிக்கப்படவிருக்கும் 44வது உலக ஊடகத்துறை தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள இந்த அமைப்பின் தேசிய செயலர் அருட்சகோதரர் Mani Mekkunnel, வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைக்கும் இணையதளம் மாபெரும் வளமாக இருப்பதால் ஒவ்வொரு துறவியும் இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கான வாயப்புப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்க்கைக்கு இணையதளம் நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்றுரைத்துள்ள திருத்தந்தையின் செயதியையும் கோடிட்டுக் காட்டியுள்ள அவர், இந்த வசதி ஏற்கத்தக்க விலையில் தற்சமயம் கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இணையதளத்தில் பெருமளவான கத்தோலிக்க இலக்கியங்கள் கிடைப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அருட்சகோதரர் Mekkunnel, இவை மாற்றங்களுக்கு நல்ல கருவிகளாக இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.