2010-05-12 16:25:33

ஷங்கைய் மறைமாவட்டம் மத்தேயு ரிச்சி ஆண்டை ஆரம்பித்துள்ளது


மே12,2010 சீனாவுக்கு மறைபோதகராகச் சென்ற புகழ்வாய்ந்த இத்தாலிய மறைபோதகரான இயேசு சபை அருள்தந்தை மத்தேயு ரிச்சி இறந்ததன் 400ம் ஆண்டு நிறைவான இந்த மே 11ம் தேதியன்று மத்தேயு ரிச்சி ஆண்டை ஆரம்பித்துள்ளது ஷங்கைய் மறைமாவட்டம்.

குருக்கள், கன்னியர், பொதுநிலையினர் ஆகியோர் மத்தியில் நற்செய்திப்பணியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த சிறப்பு ஆண்டைத் தொடங்கியுள்ளதாக அறிவித்த Shanghai ஆயர் Aloysius Jin Luxian, வருகிற டிசம்பர் 11ம் தேதியோடு இது நிறைவடையும் என்று அறிவித்தார்.

இச்சிறப்பு ஆண்டின் இந்த ஏழுமாதங்களில் கருத்தரங்குகள், செபக்கூட்டங்கள், குருத்துவ திருநிலைப்பாடு போன்றவை இடம் பெறும் என்றும் ஆயர் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.