“விளக்குடன் உலவும் தேவதை” என்று புகழ்பெற்ற புளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தது இந்த
மே 12. போர்களின் போது, இந்தப் பெண் கைகளில் விளக்கேந்தி இரவில் தெருக்களில் சென்று,
காயப்பட்டிருக்கும் பல வீரர்களுக்குப் பணிவிடை செய்தவர். இவர் இன்றும் செவிலியர்களுக்கு
ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இவர் கூறிய ஒரு சில பொன்மொழிகள் இதோ:
உணர்வுகளை
வார்த்தைகளாய் கொட்டி வீணாக்குவதைக் காட்டிலும், செயல்பாடுகளில் காண்பிக்கும்போது, உலகம்
முன்னேறும்.
என் வாழ்வில் சாக்கு போக்கு சொல்லி தப்பித்ததில்லை. இதுவே என் வெற்றிக்கு
ஒரு முக்கிய காரணம்.
பயத்தில் செய்யப்படும் செயல்கள் மிகச் சிறிய அளவிலேயே இருக்கும்.
உலகம்
உள்ள நிலை கண்டு எல்லாருமே திருப்தி அடைந்திருந்தால், இந்த உலகம் முன்னேறியிருக்காது.
அதிருப்தி கொண்டவர்கள் இருந்ததாலேயே உலகம் முன்னேறியது.
எந்த ஒரு மருத்துவமனையும்
நோயாளிகளுக்குத் தீமை செய்யக் கூடாது. இப்படி நான் சொல்வது விசித்திரமாகத் தெரியலாம்.
ஆனால், இதுவே மருத்துவ மனைகள் கடைபிடிக்க வேண்டிய மிக அடிப்படையான கொள்கை.