நீரில் மூழ்கிய இளையோரைக் காப்பாற்றிய குரு இறந்தார்
மே11,2010 கோவாவில் கடல் தண்ணீரில் மூழ்கிய மூன்று இளையோரைக் காப்பாற்றிய கத்தோலிக்க
அருட்பணியாளர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
கோவாவின் Nuvem கிராமத்தின்
இயேசுமரிவளன் பங்கின் உதவிப் பங்குக்குருவான 37 வயதாகும் அருட்பணி Thomas Remedios Fernandes
என்பவர், 63 பேருடன் சுற்றுலாப் பயணம் சென்றார். அப்போது கடலில் உதவிக்காகக் குரல் கேட்டதையடுத்து
தண்ணீரில் இறங்கி அவர்களைக் கஷ்டப்பட்டு காப்பாற்றிய அக்குரு இறுதியில் மாரடைப்பால் இறந்தார்
என்று அவரோடு சென்றவர்கள் அறிவித்துள்ளனர்.
17க்கும் 19 வயதுக்கும் உட்பட்ட இரண்டு
இளைஞிகள் மற்றும் ஓர் இளைஞனை இக்குரு காப்பாற்றியிருக்கிறார்