திருத்தந்தை- பிரேசில் நாட்டு மையமாக திருநற்கருணை கண்டுணரப்பட வேண்டும்
மே10,2010 வருகிற வியாழன் முதல் ஞாயிறு வரை பிரேசில் நாட்டில் நடைபெறவிருக்கும் 16வது
தேசிய திருநற்கருணை மாநாட்டிற்கும் இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில்
வாழ்த்துக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பிரேசில் நாட்டின்
இதயமே திருநற்கருணைதான் என்றும் இம்மாதம் 13 முதல் 16 வரை இடம் பெறும் இந்த மாநாட்டின்
போது அந்நாட்டு மக்களுடன் தான் ஆன்மீக ரீதியில் ஒன்றித்திருப்பதாகவும் உறுதி கூறினார்
திருத்தந்தை.
தனது சிறப்புப் பிரதிநிதியாக கர்தினால் க்ளவ்தியோ ஹூயூம்ஸ் இதில்
கலந்து கொள்ளவிருப்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, பிரேசில் நாட்டு அனைத்து மேய்ப்பர்களும்
விசுவாசிகளும் உங்கள் நாட்டின் மையமாகத், திருநற்கருணையை கண்டுணர வேண்டுமெனத் தான் வாழ்த்துவதாகவும்
கூறினார்.