2010-05-10 16:43:00

சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் குறித்த மத்திய பிரதேச நீதிமன்றத் தீர்மானத்திற்குத் தலத்திருச்சபைத் தலைவர்கள் வரவேற்பு


மே10,2010 இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில், சிறுபான்மை மாணவர்க்கு மட்டும் முன்னர் ஒதுக்கப்பட்டிருந்த இடங்களை மற்ற மாணவர்களுக்குக் கொடுப்பதற்கு அனுமதியளித்துள்ள நீதிமன்றத் தீர்மானத்தை தலத்திருச்சபைத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்றுப் பேசிய ஜபல்பூர் ஆயர் ஜெரால்டு அல்மெய்தா,(Gerald Almeida) வருங்காலத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் திறமையுடன் செயல்படுவதற்கு இந்தத் தீர்ப்பு உதவும் என்று கூறினார்.

மத்திய பிரதேச மாநிலக் கல்விக் கொள்கையின்படி சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அந்த வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50 விழுக்காடு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்தக் கொள்கையின்படி பள்ளிகளில் இடங்கள் காலியாக இருந்தால் அந்த இடங்களில் மற்றவர்களையும் சேர்க்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.