சுவிட்சர்லாந்து அரசுத் தலைவர் திருத்தந்தை சந்திப்பு
மே06, 2010 இவ்வியாழனன்று சுவிட்சர்லாந்து குடியரசுத் தலைவர் Doris Leuthard ரையும் சுமார்
25 நிமிடங்கள் திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை.
திருத்தந்தையைச்
சந்தித்த பின்னர், கர்தினால் பெர்த்தோனே, பேராயர் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார்
சுவிஸ் அரசுத்தலைவர் Leuthard.
இச்சந்திப்புகளில் வத்திக்கானில் இந்நாளில் 30
புதிய சுவிஸ் கார்ட்ஸ் பணிப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு
விடுக்கப்பட்டது. இன்னும், சமூக-பொருளாதார விவகாரங்கள், தற்போதைய சர்வதேச நிலைமை, குறிப்பாக
பல்சமய உரையாடல் ஆகியவை இச்சந்திப்பில் பேசப்பட்டன.