எல் சால்வதோர் நாட்டுச் சிறைகளின் நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டும் - சான் சால்வதோர்
பேராயர் அரசை வலியுறுத்தல்
மே06,2010 எல் சால்வதோர் நாட்டுச் சிறைகளின் நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டும், அதன்மூலம்
கைதிகளின் மனித மாண்பு மீறப்படாமல் இருக்கும் என்று சான் சால்வதோர் பேராயர் ஹோசே லூயிஸ்
எஸ்கோபார் அலாஸ் கூறியுள்ளார்.
எல் சால்வதோர் நாட்டின் பல சிறைகளில் காணப்படும்
மோசமான நிலைமைகளை எதிர்த்து பல சிறைகளின் கைதிகள் கடந்த வாரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதை
அரசு அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டிய பேராயர், சிறைகளின் தரத்தை மேம்படுத்துமாறு கோரியுள்ளார்.
அந்நாட்டிலுள்ள
19 சிறைகளில் எட்டாயிரம் கைதிகளே இருக்க முடியும் என்ற நிலையில் சுமார் 23 ஆயிரம் கைதிகள்
இருப்பதாகக் கூறப்படுகின்றது.