மே01,2010 மே2, பாஸ்கா கால 5ம் ஞாயிறு. இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் இயேசு தம் சீடரிடம்
சொல்கிறார் - பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். ஒருவர் மற்றவரிடம்
அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம்
அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர்
மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து
கொள்வர் ' என்று. இந்த ஞாயிறு திருப்பலியின் மூன்று வாசகங்களின் அடிப்படையில் இன்று மறையுரை
வழங்குகிறார் அருள்திரு கஸ்பார், கிளேரிசியன் துறவு சபை