2010-04-30 16:01:50

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், துன்பங்கள் மற்றும் அநீதிகளுக்கு மத்தியில் செயலாற்றல் அற்றவராக அவர் ஒருபோதும் இருந்ததில்லை - இத்தாலிய செனட் அவைத் தலைவர்


ஏப்ரல்30,2010 திருத்தந்தை 16ம் பெனடிக்ட், துன்பங்கள் மற்றும் அநீதிகளுக்கு மத்தியில் செயலாற்றல் அற்றவராக அவர் ஒருபோதும் இருந்ததில்லை என்று இத்தாலிய செனட் அவைத் தலைவர் Renato Schifani கருத்து தெரிவித்தார்.

இம்மாதம் 18ம் தேதி தமது ஐந்தாண்டுகாலப் பாப்பிறைப் பணியை நிறைவு செய்த திருத்தந்தையின் பணியின் தாக்கம் குறித்துச் சிந்தித்த Schifani, திருச்சபையிலிருக்கின்ற ஓநாய்களின் முகத்தை எதிர்கொள்வதற்கு அவர் பயப்படவில்லை என்றார்.

அமலமரிச் சிறார் சபை, சிந்தனைகள் குறைவுபடுவதால் உலகம் துன்புறுகின்றது என்ற தலைப்பில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்கிபானி திருத்தந்தை குறித்த இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.

அன்பு செயவதென்பது துன்புறத் தயாராக இருப்பது என்பதை உண்மையிலேயே அறிந்துள்ள திருத்தந்தை, மேய்ப்பர் என்ற விதத்தில், மனிதர்களோடு உண்மையிலேயே வரலாறு படைத்த இயேசுவுக்குச் சான்று பகர்கின்றார் என்றும் இத்தாலிய செனட் அவைத் தலைவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.