சுமார் 90,000 அகதிகள் இன்னும் முகாம்களில் துன்புறுகின்றனர்- இலங்கை காரித்தாஸ் அமைப்பு
ஏப்ரல்30,2010 இலங்கையின் முப்பது வருடப் போர் முடிவுக்கு வந்து ஏறத்தாழ ஓராண்டு ஆகிய
பின்னரும், சுமார் 90,000 அகதிகள் இன்னும் முகாம்களில் துன்புறுகின்றனர் என்று இலங்கை
கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
இவ்வியாழனன்று காரித்தாஸ்
வெளியிட்டுள்ள அறிக்கையில், பல ஆண்டுகள் போருக்குப் பின்னர் இலங்கை, உண்மையான அமைதியுடன்
வாழ வேண்டியிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதைய அசாதாரண வெப்பநிலையால்
தண்ணீர் பற்றாக்குறையும், நிலைமையை மேலும் மோசமாக்கியிருப்பதாக இலங்கை காரித்தாஸ் இயக்குனர்
அருட்திரு ஜார்ஜ் சிகாமணி கூறினார்