மும்பைக்கருகில் கத்தோலிக்க குரு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்
ஏப்ரல்29,2010 இந்தியாவின் மும்பைக்கருகிலுள்ள வசை ஆயர் இல்லத்திற்கு ஒரு கிலோ மீட்டர்
தூரத்திலிருக்கின்ற Baboola வில் இப்புதன் இரவு ஒரு கத்தோலிக்க அருட்பணியாளர் கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டுள்ள
அருள்தந்தை Peter Bombacha 74 வயதை விரைவில் எட்டவிருக்கின்றார், அனைவராலும் அன்பு செய்யப்பட்டு
மதிக்கப்பட்டவர் என்று வசை பேராயர் பெலிக்ஸ் மச்சாடோ கூறினார்.
இக்கொலைக்கான காரணம்
இதுவரைத் தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது.