தண்ணீர் விநியோகம் நற்செய்தி அறிவிக்க உதவுகின்றது – ஜாபுவா தலத்திருச்சபை
ஏப்ரல்29,2010 இந்தியாவில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய பிரதேச மாநிலத்தில்
திருச்சபை வழிப்போக்கர்களுக்குத் தண்ணீர் கொடுத்து வருவது, திருச்சபை மக்களைச் சென்றடைய
ஒருவழியாக இருக்கின்றது என்று Jhabua ஆயர் Devprasad Ganawa கூறினார்.
மத்திய
பிரதேச மாநிலத்தில் பகல் நேரத்தில் 40 செல்சியுஸ் டிகிரிக்கு அதிகமாக வெப்பம் இருக்கின்றது,
பொதுவான நீர் வளங்களும் வற்றி விட்டன. Jhabua மற்றும் பல மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்படவை
என அரசு அறிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கிறிஸ்தவம் போதிக்கப்படுவது
சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில், திருச்சபை செய்யும் இவ்வுதவி
மூலம் பல மக்களைச் சந்திக்க முடிகின்றது என்று இறைவார்த்தை சபையைச் சேர்ந்த ஆயர் Ganawa
கூறினார்.