நற்செய்தியின் ஒளியில் குடியேற்றதாரரின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட திருத்தந்தை அழைப்பு
ஏப்ரல்28,2010 நற்செய்தியின் ஒளியில் குடியேற்றதாரரின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு அவர்கள்
எல்லா நிலைகளிலும் மாண்புடன் வாழக்கூடிய வாய்ப்புக்கள் வழங்கப்படுவார்கள் என்ற தனது நம்பிக்கையைத்
தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஸ்பெயினின் மாலாகாவில் (Malaga)வில்
இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள ஐரோப்பிய குடியேற்றதாரர் குறித்த 8வது ஐரோப்பிய ஆயர் பேரவைகளின்
கூட்டத்திற்குத் திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே
அனுப்பியுள்ள செய்தியில், தங்கள் நாட்டை விட்டு வந்து துன்புறும் இம்மக்களின் நல்வாழ்வு
மேம்படுத்தப்பட ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கில்
கலந்து கொள்ளும் அனைவரையும் திருத்தந்தை வரவேற்பதாகவும் அவர்களுக்கு அவர் தமது ஆசீரையும்
வழங்குவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியானது திருப்பீட
குடியேற்றதாரர் அவையின் தலைவர் பேராயர் அந்தோணியோ மரிய வேலியோவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.