பிரிட்டன் ஆயர்கள் மே மாதத்தில் வெள்ளிக்கிழமை செபங்களுக்குப் பரிந்துரைத்துள்ளனர்
ஏப்ரல்27,2010 பிரிட்டனில் சில குருக்களால் செய்யப்பட்ட பாலியல் தவறுகளால் ஏற்பட்டுள்ள
துர்மாதிரிகைக்குக் கடவுளின் மன்னிப்பை சிறப்பாக இறைஞ்சுவதற்கென வருகிற மே மாதத்தில்
நான்கு வெள்ளிக்கிழமைகளை அர்ப்பணிக்குமாறு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் விசுவாசிகளைக்
கேட்டுள்ளனர்.
கிறிஸ்துவின் உடலின் ஒற்றுமைக்கும், பரிகாரம் மற்றும் கழுவாய் தேடும்
செபங்களைச் செய்யுமாறும் விசுவாசிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளனர் ஆயர்கள்.
சில
குருக்கள் மற்றும் சில துறவிகளால் செய்யப்பட்ட தவறுகள் மிகச்சிலரின் சொந்தப் பாவங்கள்
எனினும் நாம் அனைவரும் கிறிஸ்துவின் உடலாக இணைந்துள்ளதால் அவர்களின் பாவங்கள் நம்மையும்
பாதிக்கின்றன என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.
திருத்தந்தை 16ம் பெனடிக்டின்
ஞானமும் தைரியமும் நிறைந்த தலைமைத்துவம் இக்காலத்தில் திருச்சபைக்குத் தேவைப்படுவதால்
அவருக்காகத் தாங்கள் சிறப்பாகச் செபிப்பதாகவும் பிரிட்டன் ஆயர்கள் தங்கள் அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளனர்.