திருத்தந்தையின் முதல் வெளிநாட்டுத் திருப்பயணம் மிக நேர்த்தியாக நடைபெற்றது - அருட்தந்தை
லொம்பார்தி
ஏப்ரல்26,2010 திருத்தந்தை 16ம் பெனடிக்டின் மால்ட்டாவுக்கானத் திருப்பயணம், குறிப்பாக,
குருக்களின் தவறான பாலியல் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களை அச்சமயத்தில் திருத்தந்தை
சந்தித்தது, திருச்சபையில் அப்பிரச்சனைக்கு முடிவு கட்டுவதற்கானத் தீர்மானமான நடவடிக்கையாக
இருந்தது என்று திருப்பீடப் பேச்சாளர் சேசு சபை அருட்தந்தை Federico Lombardi கூறினார்.
ஏப்ரல்17,
18 தேதிகளில் திருத்தந்தை மேற்கொண்ட மால்ட்டாவுக்கானத் திருப்பயணம் குறித்து Octave Dies
என்ற தொலைகாட்சி நிகழ்ச்சியில் பேசிய அருட்தந்தை Lombardi இவ்வாண்டில் இடம் பெற்ற திருத்தந்தையின்
முதல் வெளிநாட்டுத் திருப்பயணம் மிக நேர்த்தியாக நடைபெற்றதாகத் தெரிவித்தார்.