சீன அரசும், வத்திக்கானும் இணைந்து அளித்த ஒப்புதலின் பேரில் சீனாவின்
Haimen மறைமாவட்டத்தின் ஆயர் திருநிலைப் படுத்தப்பட்டார்
ஏப்ரல்22,2010 சீன அரசும், வத்திக்கானும் இணைந்து அளித்த ஒப்புதலின் பேரில் சீனாவின்
Jiangsu பகுதியில் உள்ள Haimen மறைமாவட்டத்தின் ஆயராக Joseph Shen Bin இப்புதனன்று அங்குள்ள
நல்லாயன் பேராலயத்தில் ஆயராகத் திருநிலைப் படுத்தப்பட்டார். ஐந்து ஆயர்கள் உட்பட முப்பது
குருக்கள் கலந்து கொண்ட கூட்டுத் திருப்பலியில், 1500 விசுவாசிகள் முன்னிலையில் இந்தத்
திருநிலைப்பாடு திருப்பலி நடைபெற்றது. திருநிலைப் பாட்டிற்குப் பிறகு, செய்தியாளர்களிடம்
பேசிய ஆயர் Shen, குருக்கள், துறவறத்தார், பொது நிலையினரின் விசுவாச வாழ்க்கையை முன்னேற்றுவதே
தன் தலையாயப் பணி என்று கூறினார். மேலும், சீனாவின் மங்கோலியப் பகுதியில் Paul Meng
Qinglu இஞ்ஞாயிறன்று ஆயராகத் திருநிலை படுத்தப்பட்டார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.வத்திக்கானுக்கும்,
சீன அரசுக்கும் பல்வேறு விடயங்களில் ஒத்தக் கருத்துக்கள் இல்லை எனினும், இந்த இரு ஆயர்களையும்
சீன அரசு அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்துள்ளது சீனாவில் திருச்சபை இன்னும் ஆழமாய் வேரூன்ற
ஒரு வாய்ப்பு என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.