2010-04-21 15:32:15

வன்முறைகளில் காயமடையும் இளஞ்சிறாரின் எண்ணிக்கை ஓராண்டில் எட்டு விழுக்காடு அதிகரித்திருப்பு


ஏப்ரல்21,2010 வன்முறைத் தாக்குதல்களின் போது காயமடையும் இளஞ்சிறாரின் எண்ணிக்கை ஓராண்டில் எட்டு விழுக்காடு அதிகரித்திருப்பதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸிலுள்ள அவசரக்காலப் பிரிவு அறிவித்தது.

எனினும், எல்லா மட்டங்களிலும் கடும் வன்முறைகளின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது என்று Cardiff பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வாளர்கள் எடுத்த கணக்கெடுப்பின்படி, 2009ம் ஆண்டில் 3,50,000 பேர் வன்முறையினால் ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்த சிகிச்சை பெற்றனர், இந்த எண்ணிக்கை 2008ம் ஆண்டைவிட 1500 குறைவு என்று அவர்கள் தெரிவித்தனர்.

சிகிச்சை தேவைப்படும் 11 வயதுக்குட்பட்ட 28 ஆயிரம் சிறார் உள்ளனர் என்று கூறப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.