2010-04-20 15:49:58

கியூப நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்குவதாக அந்நாட்டு கர்தினால் கவலை


ஏப்ரல்20,2010 கியூபாவின் சோஷலிச அமைப்புமுறையைக் குறை கூறியுள்ள அந்நாட்டு கர்தினால் ஹைமே ஒர்த்தேகா, நாடு மிக மோசமான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் கவலையை வெளியிட்டுள்ளார்.

கியூபாவின் கத்தோலிக்கச் செய்தி இதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்த கர்தினால், தேவையான மாற்றங்களை உடனடியாக ஆற்ற அரசு முன்வரவேண்டுமென அழைப்புவிடுத்தார்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின் தற்போதே மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் கியூப நாட்டிற்கு உலக பொருளாதார நெருக்கடி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பொருளாதாரத்தடை, அண்மைப் பெரும் புயல்கள் போன்றவை சுமைகளை வழங்கியுள்ளன.

இன்றைய சோஷலிச கியூப அரசு, வேலையில் ஆர்வமில்லாத் தொழிலாளர்களையும் உற்பத்திக் குறைவையுமே தந்துள்ளது என்ற கவலையை வெளியிட்டார் கர்தினால் ஒர்த்தேகா.

அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என கியூப அரசு அகதிகளுக்கு விண்ணப்பம் விடுப்பதாகவும் கூறினார் கர்தினால்.








All the contents on this site are copyrighted ©.