மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்.
ஏப்ரல் 19. மத்திய பிரதேசத்தின் Betul நகர் அருகே கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் ஒன்று முகமூடி
அணிந்த அடையாளம் தெரியாத மனிதர்களால் தாக்கப்பட்டதில் தப்பியோடிய ஒருவர் உயிரிழந்துள்ளார்,
மூவர் காயமடைந்துள்ளனர்.
சனியன்று இரவு திறந்த வெளியில் ஜெபவழிபாடு கூட்டம் ஒன்றை
நடத்திக்கொண்டிருந்த கிறிஸ்தவக்குழு ஒன்றின் மீது 10 பேர் கொண்ட முகமூடி அணிந்த குழு
ஒன்று தாக்குதல் நடத்தியதால், அங்கிருந்து தப்பியோடிய கிறிஸ்தவர் ஒருவர் கிணற்றில் தவறி
விழுந்து உயிரிழக்க, ஏனைய மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல் துறை அறிவித்தது.
காவித்துணியால்
முகத்தை மூடி வந்த இக்குழு நடத்தியத் தாக்குதலில் காயமடைந்தவர்களுள் பெண் ஒருவரும் அடங்குவார்.