2010-04-18 15:09:25

ஏப்ரல் 19 நாளும் ஒரு நல்லெண்ணம்


அந்த ஆசிரமத்தில் குரு தம் சீடர்களிடம், இரவு முடிந்து, விடிந்து விட்டதென்பதை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்டார். அதற்கு அவர்கள், ஒரு மரத்தை மற்றொரு மரத்திலிருந்து பிரித்து பார்க்கும் போது, விடிந்துவிட்டதென்று தெரிந்து கொள்ளலாம், ஒரு மிருகத்தை மரத்திலிருந்து வேறுபடுத்தி பார்க்க முடிந்தால் விடிந்து விட்டதென்பதை உணரலாம் என்று பல்வேறு பதில்கள் சொன்னார்கள். அதற்கு அந்தக் குரு சொன்ன பதில் அழகானது: "முன் பின் அறிமுகமில்லாத ஒருவரை எப்போது உங்கள் சகோதரனாக உங்களால் பார்க்க முடிகிறதோ, அப்போதுதான் விடிந்து விட்டது என்பதை புரிந்து கொள்ளலாம்."








All the contents on this site are copyrighted ©.