2010-04-16 16:13:53

ஏப்ரல் 17 நாளும் ஒரு நல்லெண்ணம்


ஒருநாள் சென்னையில் ராஜா, ரவி என்ற இரண்டு இளைஞர்கள் புதிதாய்த் திரைக்கு வந்த திரைப்படத்தைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளிலில் வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். அச்சமயம் மேம்பாலத்தில் முக்கித் திணறி விறகுகள் நிறைந்த ஓர் வண்டியை ஒருவர் இழுத்துச் சென்று கொண்டிருந்தார். இதனால் போக்குவரத்து தடைபடவே பலர் அந்த வண்டிக்காரரைத் திட்டித் தீர்த்தனர். டேய், ராஜா, அந்த வண்டியைத் தள்ளிவிட்டு ஐந்து நிமிடத்தில் வருகிறேன். நீ, பாலத்தை விட்டு கீழே நில் என்றான் ரவி. டேய் ரவி, உனக்கு என்ன பைத்தியமா, ஏற்கனவே நாம லேட். உட்கார் போகலாம் என்றான் ராஜா. பதில் ஒன்றும் சொல்லாமல் வண்டியைவிட்டு இறங்கி, நீ போ. நான் இன்னொரு நாள் படத்துக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு விறகு வண்டிக்காரருக்கு உதவி செய்தான் ரவி. அந்த வண்டிக்காரரின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.

சிந்திப்போம் - உன் கனவுகளை நனவாக்க ஏதாவது செய்யாமல் இன்றைய நாளை மறைய விடாதே.








All the contents on this site are copyrighted ©.