2010-04-15 15:24:18

ரோமையிலுள்ள கர்தினால்கள் அனைவரும் திருத்தந்தை திருச்சபைத் தலைவராகப் பொறுப்பேற்ற ஐந்தாம் ஆண்டை சிறப்பிக்க உள்ளனர்


ஏப்ரல்15,2010 ரோமையிலுள்ள கர்தினால்கள் அனைவரும் வருகிற திங்கட்கிழமை கூடி, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருச்சபைத் தலைவராகப் பொறுப்பேற்ற ஐந்தாம் ஆண்டை சிறப்பிக்க உள்ளனர்.
ஏப்ரல் 16 இவ்வெள்ளியன்று தன் 83வது பிறந்த நாளைக் கொண்டாடும் பாப்பிறை, 1927ஆம் ஆண்டு ஏப்ரல் 16, ஜெர்மனியிலுள்ள Bavaria பகுதியின் Marktl am Inn என்ற ஊரில் பிறந்தார்.திருத்தந்தை தன் பிறந்த நாளையும், திருத்தந்தையாய் பொறுப்பேற்ற ஐந்தாம் ஆண்டு நிறைவையும் இச்சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மால்ட்டாவில் ஒரு வேளை கொண்டாடலாம் என்று திருப்பீட அதிகாரப் பூர்வ பேச்சாளர் இயேசுசபைக் குரு Federico Lombardi செய்தியாளர்களிடம் இப்புதனன்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.