2010-04-14 15:03:57

இலங்கையில் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் புத்தாண்டை பல சமயத்தவரும் இணைந்து சிறப்பித்தனர்


ஏப்ரல்14,2010 இலங்கையில் அனைத்து மக்கள் மத்தியிலும் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை கிறிஸ்தவர்கள் உட்பட பல சமயத்தவரும் இணைந்து கொண்டாடினர்.

பலவருட உள்நாட்டுப் போரை எதிர் கொண்ட இந்நாட்டில் அமைதி மற்றும் ஒப்புரவை உருவாக்கும் விதமாக புத்த மற்றும் இந்து மதத்தவருடன் கலாச்சார விளையாட்டுக்களை நடத்தி புத்தாண்டைக் கொண்டாடியதாக ரத்னபுரா ஆயர் Cletus Perera கூறினார்.

மக்களின் மனங்களை மாற்றி துன்புறும் மக்களின் காயங்களைக் குணப்படுத்துவதற்கு இக்கொண்டாட்டங்கள் நல்ல தருணம் என்று ஆயர் பெரேரா கூறினார்.

ஏப்ரல் 14ம் தேதியன்று சிங்களர்களும் தமிழர்களும் புத்தாண்டை சிறப்பிக்கின்றனர்







All the contents on this site are copyrighted ©.