1919 - ஜாலியன்வாலா பாக் படுகொலை இடம் பெற்றது. அமிர்தசரசில் ஜாலியன்வாலா பாக் திடலில்
கூடியிருந்த மக்களை நோக்கி பிரித்தானியப் படையினர் சுட்டதில் குறைந்தது 379 பேர் உயிரிழந்தனர்.
குறைந்தது 1,200 பேர் காயமடைந்தனர். 1930 - மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு
ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது. 1939 - இந்தியாவில்
இந்திய செம்படை என்ற ஆயுதப்போராட்ட அமைப்பு, பிரித்தானியர்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது.
1954 - காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.