2010-04-06 16:26:39

சூடானில் இடம்பெற உள்ள தேர்தல்களில், பொறுப்புடன் பங்கேற்க வேண்டும் - பேராயர் Paulino Lukudu Loro


ஏப்ரல்06,2010 இம்மாதம் 11 மற்றும் 13 தேதிகளில் சூடானில் இடம்பெற உள்ள தேர்தல்களில், பொறுப்புடன் பங்கேற்று நாட்டின் வருங்காலத்தைக் கட்டி எழுப்புவதில் உதவ வேண்டும் என அந்நாட்டு பேராயர் Paulino Lukudu Loro விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வாக்களித்தல் என்பது ஒருவரின் உரிமை மற்றும் கடமை எனக் குறிப்பிட்ட Juba பேராயர், இதன் மூலமே நம் நாட்டின் அக்கறையை வெளிப்படுத்த முடியும் என்றார்.
25 ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக சூடானில் ஜனநாயக முறையில் தேர்தல் இடம் பெற உள்ள இவ்வேளையில், வாக்காளர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கும் விண்ணப்பித்துள்ளார் பேராயர்.Kenya மற்றும் Zimbabwe நாடுகளில் அண்மைத் தேர்தல்களுக்குப் பின் இடம் பெற்ற வன்முறைகளைச் சுட்டிக் காட்டிய பேராயர் Loro, அத்தகைய நிகழ்வு சூடானிலும் இடம் பெறாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.







All the contents on this site are copyrighted ©.