2010-04-05 15:38:20

கிறிஸ்தவ தலித் மக்களுக்கும் அரசு சலுகைகள் வழங்கப்பட வேண்டுமென கருணாநிதி மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதம்


ஏப்ரல்05,2010 கிறிஸ்தவ தலித் மக்களையும் இந்துக்களுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகளில் இணைக்க வேண்டுமென தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி, பாரத பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இப்புனித வெள்ளியன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்து, சீக், புத்தம் ஆகிய மதங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களே அரசு சலுகைகளுக்குரியவர் என்று கூறும் இந்திய சட்டத்தின் பகுதியை நீக்க வேண்டும் என்றும், அரசின் சலுகைகள், ஒருவரின் பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும், அவர்களது மதத்தின் அடிப்படையில் அல்ல என்றும் முதலமைச்சர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.அரசின் சலுகைகளை கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பெற்றுத் தருவதில் கத்தோலிக்க ஆயர்கள், குருக்கள், துறவியர் உட்பட பல கிறிஸ்தவ, முஸ்லிம் தலைவர்கள் இணைந்து அண்மைக் காலங்களில் அரசுடன் பேச்சுவார்த்தைகள் நிகழ்த்துதல், போராட்டங்களில் ஈடுபடுதல் ஆகிய முயற்சிகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.