2010-04-05 15:39:20

இலங்கை தேர்தல் வன்முறைகள் அதிகரித்துள்ளன


ஏப்ரல்05,2010 ஏப்ரல் 8ஆம் தேதி, இவ்வியாழனன்று நடைபெற உள்ள இலங்கை பாராளு மன்றத் தேர்வுகளை ஓட்டி அந்நாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இலங்கையில் தேர்தல் சட்டவிதி மீறல்கள் மற்றும் வன்முறைகள் இடம்பெற்றுள்ள நாட்களில் இந்த வார இறுதி நாட்களே மிக மோசமானவையாக பதிவாகியுள்ளதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான இயக்கமாக செயலாற்றி வரும் கஃபே என்ற அமைப்பின் இயக்குநர் கீர்த்தி தென்னக்கோன் சுட்டிக்காட்டினார்.யாழ்ப்பாணத்தில் அமைதியான முறையில் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்றுவருகின்ற போதிலும், மன்னார் பிரதேசத்தில் தொடர்ச்சியாக வன்முறைகள் பதிவாகியுள்ளதாகவும் தமிழ்க்கட்சிகளுக்கு கிளிநொச்சி போன்ற மீளக்குடியேற்றப் பகுதிகளுக்கு சென்று பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.