ஆந்திராவில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பல்சமய குழுக்கள் முயற்சி
மார்ச் 31,2010 இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இரண்டு நாட்களாக இடம் பெற்ற இந்து-முஸ்லீம்
மோதல்களைத் தொடர்ந்து அமைதியை ஏற்படுத்துவதற்கு கிறிஸ்தவர்கள் உட்பட பல்சமய குழுக்கள்
முயற்சித்து வருகின்றன.
கடந்த சனிக்கிழமை பழைய ஹைதராபாத் நகர்ப் பகுதியில் இந்து
மற்றும் முஸ்லீம் குழுக்களுக்கு இடையே இடம் பெற்ற மோதல்களில் ஒருவர் இறந்துள்ளார் மற்றும்
பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த பல்சமயக் குழுவின் முயற்சி குறித்துப் பேசிய ஆந்திர
மாநில கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் செயலர் அருள்திரு அந்தோணிராஜ் தும்மா, கலவரம் நடைபெற்ற
இடங்களைப் பார்வையிடுவதற்குத் திட்டமிடப்பட்டு வருவதாகக் கூறினார்.
அரசை நிலைகுலையச்
செய்யும் நோக்கத்தில் இக்கலவரம் தூண்டிவிடப்பட்டுள்ளதாக பொதுஜனம் கருதுவதாக ஓர் அதிகாரி
கருத்து தெரிவித்தார்