இலங்கைத் தமிழர், செபம், தியானம் மற்றும் திருப்பயணங்கள் செய்து இந்தப் புனித வாரத்தை
அனுசரித்து வருகின்றனர்
மார்ச்30,2010 பல ஆண்டுகள் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர், செபம், தியானம்
மற்றும் திருப்பயணங்கள் செய்து இந்தப் புனித வாரத்தை அனுசரித்து வருகின்றனர் என்று ஆசிய
செய்தி நிறுவனம் அறிவித்தது.
மன்னார் மறைமாவட்டத்தில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட
விசுவாசிகள் Parappukadantan திருத்தலத்திற்குத் திருப்பயணம் மேற்கொண்டனர், அதன் இறுதியில்
மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு திருப்பலி நிகழ்த்தினார் என்றும் குருகுல அதிபர் அருள்திரு
விக்டர் சூசை கூறினார்.
ஆயர் ஜோசப் தனது மறையுரையில், கிறிஸ்து மனித குலத்தின்
மீது கொண்டிருக்கும் அன்பை நினைவுபடுத்தி, விசுவாசிகள் புனித பவுலைப் பின்பற்றி கிறிஸ்துவை
அன்பு செய்யுமாறு கேட்டுக்கொண்டார் என்று குரு சூசை தெரிவித்தார்.
திரிகோணமலை,
அனுராதபுரா, குருனேகாலா போன்ற மறைமாவட்டங்களில் இப்புனித வாரம் கடைபிடிக்கப்படும் விதம்
குறித்தும் ஆசிய செய்தி நிறுவனம் விளக்கியுள்ளது.