அயரா அன்புக்குத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் எடுத்துக்காட்டாய் இருக்கிறார்- திருத்தந்தை
16ம் பெனடிக்ட்
மார்ச்30,2010, இறைவனையும் அனைத்து மக்களையும் அயராது அன்பு செய்வதற்குத் திருத்தந்தை
இரண்டாம் ஜான் பால் எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
கூறினார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் வாழ்க்கை முழுவதும் அன்பின் அடையாளங்களைக்
கொண்டிருந்தன என்றும் வரையறையின்றி தாராளமனத்துடன் அனைவரையும் அவர் அன்பு செய்தார் என்றும்
பாப்பிறை தெரிவித்தார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இறந்ததன் ஐந்தாம் ஆண்டு
நினைவுதினம் ஏப்ரல் 2 இப்புனிதவெள்ளிக்கிழமையன்று வருவதால் இத்திங்கள் மாலை வத்திக்கான்
தூய பேதுரு பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வாறு கூறினார்.
இத்திருத்தந்தையின்
நோயும் உடல் பலவீனமும் பாறை போன்ற அவரது உறுதியான விசுவாசத்தை ஒருபொழுதும் பாதிக்கவில்லை
என்றும் பாப்பிறை 16ம் பெனடிக்ட் தனது மறையுரையில் கூறினார்.
மறையுரையில் போலந்து
மொழியிலும் பேசிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், போலந்து மக்கள் திருத்தந்தை இரண்டாம் ஜான்
பால் குறித்து பெருமைப்படும் அதேவேளை, அவரிடம் விளங்கிய விசுவாசம், நம்பிக்கை மற்றும்
அன்பு வாழ்வைப் பின்பற்றி வாழுமாறு கேட்டுக் கொண்டார்.