அகதிகளுக்கு புகலிடம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பிரிட்டன் ஆயர் அரசியல்வாதிகளை
வலியுறுத்தல்
மார்ச்30,2010 பிரிட்டனில் அகதிகளுக்கு புகலிடம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு
அரசியல்வாதிகளை வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு ஆயர் Patrick Lynch.
குடியேற்றதாரக்
கொள்கையின் அடிப்படையில் குடும்பங்களையும் அப்பாவிச் சிறாரையும் தடுப்புக்காவலில் வைப்பது
நிறுத்தப்படுமாறும் ஆயர் லின்ச் கேட்டுள்ளார்.
பிரிட்டன் ஆயர் பேரவையின் குடியேற்றதாரர்
ஆணையத் தலைவரான ஆயர் லின்ச், மனித உரிமைகளையும் மனித மாண்பையும் காப்பதில் கத்தோலிக்கத்
திருச்சபை தொடர்ந்து செயல்பட்டு வருவதையும் குறிப்பிட்டார்.