மார்ச்29,2010 புனித பூமியில் வாழும் யூதர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து
மக்களுக்காகவும் ஜெபிக்குமாறு விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். பாஸ்கா
மறையுண்மை நிறைவேறிய யெருசலேம் நோக்கி தற்போது நம் எண்ணம் செல்கின்றது என இஞ்ஞாயிறு ஜெப
உரையில் கூறிய திருத்தந்தை, அப்பகுதியின் முப்பெரும் மதங்களின் மக்களிடையே எழுந்துள்ள
மோதல்கள் மற்றும் பதட்ட நிலைகள் குறித்து ஆழமான கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.யெருசலேமின்
தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பிலுள்ளோர் அமைதியின் வழிகளை உறுதியுடன் கடைபிடித்து அதில்
தொடர்ந்து செயல்படவேண்டும் என செபிக்குமாறும் வேண்டினார் பாப்பிறை.