2010-03-29 16:25:23

தற்போதைய பிரச்சனைகளுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத் திருச்சபை வழங்கி வரும் பதிலுரை குறித்து மகிழ்ச்சி - இயேசு சபை குரு Federico Lombardi


மார்ச்29,2010 சிறார்களுக்கு மேலும் பாதுகாப்பை வழங்கும் உறுதிபாட்டுடன், தற்போதைய பிரச்சனைகளுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத் திருச்சபை வழங்கி வரும் பதிலுரை குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார் திருப்பீட பேச்சாளர் இயேசு சபை குரு Federico Lombardi.
சில குருக்கள் பாலின முறையில் சிறார்களைத் தவறாக நடத்தியது குறித்த செய்திகள் திருச்சபையின் ஒழுக்க ரீதி நம்பகத்தன்மை குறித்து கேள்வியை எழுப்பியுள்ளன என்ற கவலையை வெளியிட்ட திருப்பீடப் பேச்சாளர், இக்குற்றங்களை அங்கீகரித்து, பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்த வரையில் பரிகாரத்தை ஆற்றுவதே, நீதியை மீண்டும் நிலை நாட்டுவதற்கென கொடுக்கப்படும் விலை என்றார்.பல்வேறு நாடுகளின் ஆயர் பேரவைகள், தனிப்பட்ட வகையில் ஆயர்கள், கத்தோலிக்க நிறுவனங்கள், வருங்காலத்திற்கான நம்பிக்கையைக் கட்டி எழுப்பி வருவது குறித்த மகிழ்ச்சியையும் அருத்தந்தை Lombardi வெளியிட்டார். இத்தகைய முயற்சிகளில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கானடா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டையும் உதாரணமாகக் காட்டியுள்ளார் இயேசு சபைக் குரு Lombardi.







All the contents on this site are copyrighted ©.