2010-03-29 16:25:58

கொல்கொத்தா தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கென பிற மதங்களுடன் இணைந்து சிறப்பு செப வழிபாட்டை நடத்தியுள்ளது தலத் திருச்சபை


மார்ச்29,2010 கொல்கொத்தாவில் அண்மையில் இடம் பெற்ற தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கென பிற மதங்களுடன் இணைந்து சிறப்பு செப வழிபாடு ஒன்றை நடத்தியுள்ளது தலத் திருச்சபை.
தீவிபத்தில் உயிரிழந்த 34 பெருக்கென நடத்தப்பட்ட சிறப்பு செப வழிபாட்டில் ஏறத்தாழ 300 பேர் கலந்து கொண்டதாக உரைத்த கொல்கொத்தா பெரு மறை மாவட்ட குரு குல முதல்வர் குரு John Mohandas இத்தீவிபத்தில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பினோர் அனைவரும் மனத்தளர்விலிருந்து விடுபட்டு நம்பிக்கையைக் கட்டி எழுப்ப வேண்டும் என விண்ணப்பித்தார்.இதே செப வழிபாட்டில் கலந்து கொண்ட பிறிதொரு குரு Robin Gomes பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் அனைவரின் சரியான புரிந்து கொள்ளுதலுடன் ஆன பணிக்கு அழைப்பு விடுத்தார்.







All the contents on this site are copyrighted ©.