இவ்வுலகில்
தன் பணியைத்துவக்கும் போது இயேசு கூறுகிறார் :
ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில்,
அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர்
விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை
செய்து அனுப்பவும்
ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர்
என்னை அனுப்பியுள்ளார், என்று. '
தன் பணியின் நோக்கம் குறித்து தெளிவுபடுத்திய
இயேசு, அதே பாதையில் நமக்கும் சில அறிவுரைகளைத் தருகிறார்:
மண்ணுலகில் உங்களுக்கெனச்
செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும்
அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்;
அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.
உங்கள்
செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும், என்று.
ஏழைகளில் இயேசு
வாழ்கிறார் என்பது உண்மையெனில் நம் உள்ளங்கள் இயேசு வாழும் ஏழைகளில் அல்லவா இருக்கவேண்டும்.
இச்சிந்தனை செயல்பட இப்புனித வாரம் உதவட்டும்.