2010-03-26 16:42:50

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதற்கு அரசு சொல்லால் மட்டுமல்ல, செயலாலும் நடவடிக்கை எடுக்குமாறு ஆயர் பேரவைத் தலைவர் அழைப்பு


மார்ச்26,2010 பாகிஸ்தானில் அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதற்கு அரசு சொல்லால் மட்டுமல்ல, செயலாலும் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் இலாரன்ஸ் சல்தான்ஹா அழைப்புவிடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறைகளைக் கண்டித்துள்ள அதேவேளை, இக்குற்றவாளிகள் நீதிவிசாரணைக்குமுன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடக் கூடாது என்றும் அரசைக் கேட்டுள்ளார்.

கிறிஸ்தவர்கள், இசுலாமுக்கு மனம்மாற மறுத்ததற்காக உயிரோடு எறிக்கப்பட்ட அண்மை நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிய பேராயர், பாகிஸ்தானின் பிற குடிமக்கள் அனுபவிப்பது போல் கிறிஸ்தவர்களும் தங்களின் உரிமைகளை அனுபவிக்க அனுமதிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் அரசியல் அதிகாரிகள், ஊடகத்துறை, சர்வதேச சமுதாயம் என அனைவரும் கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினரும் எதிர்கொள்ளும் துன்பங்கள் மற்றும் பாதுகாப்பின்மை குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் பேராயர் இலாரன்ஸ் சல்தான்ஹா அழைப்புவிடுத்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.