2010-03-22 15:29:33

திருத்தந்தையின் கடிதம் குறித்த பிரிட்டன் மற்றும் அயர்லாந்து திருச்சபைத் தலைவர்களின் கருத்து.


மார்ச் 22. அயர்லாந்து திருச்சபை எதிர்நோக்கி வரும் பாலியல் குற்றப் பிரச்னைகள் குறித்து திருத்தந்தை வெளியிட்டுள்ள கடிதம் தலத் திருச்சபைகளுக்கான சிறந்த வழிகாட்டி என பாராட்டுதல்களை வெளியிட்டுள்ளனர் இங்கிலாந்து ஆயர் பேரவைத் தலைவரும் அயர்லாந்து கர்தினாலும்.

சில குருக்களால் பாலர்கள் பாலியல் முறையில் தவறாக நடத்தப்பட்டது குறித்து இங்கிலாந்து திருச்சபை ஆழ்ந்த கவலைக் கொண்டுள்ளதாகவும், சிறுவர்களுக்கான பாதுகாப்பை உறுதிச் செய்வதில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார் இங்கிலாந்து பேராயர் வின்சென்ட் நிக்கொல்ஸ்.

சரியான முறையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது எனவும் கூறினார் பேராயர்.

பாலர்கள் பாலியல் வகையில் தவறாக நடத்தப்பட்டது தொடர்புடைய பிரச்னைகளை எதிர்நோக்கி வரும் அயர்லாந்து திருச்சபையும் திருத்தந்தையின் கடிதத்தில் நல்லதொரு வழிகாட்டுதல்களை காண்பதாகக் கூறினார் அயர்லாந்து கர்தினால் Sean Brady.








All the contents on this site are copyrighted ©.