சைனத் திருச்சபை வாழ்வு குறித்த வத்திக்கான் கூட்டம்.
மார்ச் 22. சைனத் திருச்சபையின் பிரச்னைகள் குறித்து ஆராய திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டால்
2007ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறப்பு அவை இத்திங்கள், செவ்வாய், புதன் தினங்களில் வத்திக்கானில்
கூடி விவாதித்து வருகின்றது.
சைன ஆயர்கள் மற்றும் துறவு சபைகளின் பிரதிநிதிகளுடன்
திருப்பீடத்தின் வெவ்வேறு துறைகளின் பிரதிநிதிகளும் பங்குபெறும் இக்கூட்டம் குருக்களுக்கான
பயிற்சி குறித்து விவாதித்து வருகின்றது.
சைனாவின் பொருளாதார, சமூக, கலாச்சார
மாற்றங்களின் பின்னணியில் நற்செய்திக்கு சாட்சியாக இருப்பதில் எதிர்நோக்கப்படும் சவால்களை
எதிர்கொள்வதில் வழங்கப்படவேண்டிய பயிற்சி குறித்து கலந்துரையாடி திட்டங்களை வகுக்க உள்ளது
இக்கூட்டம்.