மார்ச்20,2010 இந்தியாவில் பரவலாகக் காணப்படும் மரணக் கலாச்சாரம், தனிப்பட்டவரின் மனிதத்தைத்
தாழ்த்தும் அனைத்துக் கூறுகளுக்கும் தீனி போடுவதாக இருக்கின்றது என்று அருள்சகோதரி கத்ரீன்
பெர்னார்டு கூறினார்.
கருக்கலைப்பு, காருண்யக் கொலை ஆகியவை மட்டுமல்ல, வறுமையும்
காழ்ப்புணர்வும்
மரணக் கலாச்சாரத்தின் அங்கங்களாக இருக்கின்றன என்றுரைத்த அருள்சகோதரி
கத்ரீன் பெர்னார்டு, இத்தகைய போக்கைக் களைவதற்குக் கிறிஸ்தவர்கள், தங்களுக்குள் வாழ்வின்
புதிய கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமென அழைப்புவிடுத்தார்.
திருச்சிலுவை சபையைச்
சேர்ந்த மருத்துவரான அருள்சகோதரி கத்ரீன் பெர்னார்டு 33 வருடங்களாக இந்தியாவில் குடும்பங்களை
முன்னேற்றுவதற்கு உழைத்து வருகிறார். Serfac என்ற குடும்பம் மற்றும் சிறார்க்கான சேவை
மையத்தையும் நடத்தி வருகிறார். கூறினார்.