2010-03-20 15:15:59

கருக்கலைப்பை நடத்துவோருக்கு, கருவில் வளரும் குழந்தைகள் “வெற்றிச் சின்னமாக” இருக்கின்றார்கள் - ஸ்பானிய பேராயர்


மார்ச்20,2010 கருக்கலைப்பை நடத்துவோருக்கு, கருவில் வளரும் குழந்தைகள் “வெற்றிச் சின்னமாக” இருக்கின்றார்கள் என்று ஸ்பானிய பேராயர் Jesus Sanz Montes கூறியுள்ளார்.

ஸ்பெயினில் வாழ்வுக்கான உரிமைப் போராட்டம் இன்னும் முடியவில்லை என்று தனது புதிய மேய்ப்புப்பணி சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள பேராயர், கருக்கலைப்பைச் செய்வோர் வேட்டையாடும் வாகைப் பூக்கள் என்று சாடியுள்ளார்.

16 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கருவுற்ற 14 வாரங்களுக்குள் கருகலைப்பு செய்வதற்கு அனுமதிக்கும் மசோதாவுக்கு அண்மையில் செனட் அவையில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள பேராயர் தாயின் கருவில் குழந்தையைக் கொல்வது அந்தத் தாயையே கொல்வதற்குத் தீர்ப்பிடுவதாக இருக்கின்றது என்று குறை கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.