காசநோயைக் குணப்படுத்துவதற்கு இதுவரைப் பயன்படுத்தப்பட்டு வந்த மருந்துகளையும் தாண்டி
அந்நோய் உலகின் சில பகுதிகளில் மிகவும் வீரியமாக இருக்கிறது
மார்ச்19,2010 காசநோயைக் குணப்படுத்துவதற்கு இதுவரைப் பயன்படுத்தப்பட்டு வந்த மருந்துகளையும்
தாண்டி அந்நோய் உலகின் சில பகுதிகளில் மிகவும் வீரியமாக இருப்பதாக WHO எனும் உலக நலவாழ்வு
நிறுவனம் எச்சரி்த்துள்ளது.
இந்த சிகிச்சை பலனளிக்காததால், பன்மருந்து சிகிச்சை
பெறும் 4 இலட்சத்து 40 ஆயிரம் காச நோயாளிகளில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் 2008ம்
ஆண்டில் இறந்துள்ளனர் என்று அந்நிறுவன அறிக்கை கூறுகிறது.
இம்மாதிரியான நிலை ஆசியாவில்
அதிர்ச்சிதரக்கூடிய நிலையில் இருப்பதாகவும், இவ்விறப்புக்களில் ஏறத்தாழ பாதி சீனாவில்
இடம்பெற்றதாகவும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
மார்ச் 24ம் தேதி உலக காசநோய்
தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது WHO நிறுவனம்.