2010-03-18 15:24:56

பிரேசில் நாட்டில் இஞ்ஞாயிறு  கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட  அருட் தந்தை செவ்வாயன்று காலமானார்


மார்ச்18,2010 பிரேசில் நாட்டில் Volta Redonda பகுதியில் இஞ்ஞாயிறு  கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட  32 வயதான அருட் தந்தை Dejair Goncalves de Almeida இச்செவ்வாயன்று காலமானார். அவரது உடல் இப்புதன் அடக்கம் செய்யப்பட்டது.
அருட்தந்தை Almeidaவுடன் 26 வயதான குருமாணவர்  Epaminondas Marques da Silvaவும் கடத்தப்பட்டார். கடத்தல் குழுவினர் இருவரிடமும் எதிர்பார்த்த பணம் அவர்களிடம் இல்லாததால், அவர்களைத் தாக்கினர். குருமாணவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார், அருட்தந்தை பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைகள் பலனளிக்காமல் இச்செவ்வாயன்று காலமானார்.
 இது போன்ற வன்முறைகளால் அமைதிக்கு உழைக்கும் அருட்பணியாளர்கள் உயிரிழப்பது வேதனைக்குரியதென்றும், இது போன்ற வன்முறைகள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளவர்களால் அடிக்கடி நடத்தப்படுவது கவலையைத் தருகிறதென்றும் Volta Redonda மறைமாவட்ட ஆயர் Joao Maria Messi கூறினார். பழிக்குப் பழி என்ற வகையில் இவ்வன்முறைகளுக்கு தீர்வு காண முடியாது எனினும், நாட்டில் காவல் துறையினர் இன்னும் விழிப்புடன் செயல்படவும், நாட்டில் வேளை வாய்ப்பின்றி தவிக்கும் இளையோருக்கு சரியான திட்டங்கள் வகுக்கப்படவும் இவை போன்ற உயிர் பலிகள் ஒரு அழைப்பு என்றார் ஆயர் Messi.







All the contents on this site are copyrighted ©.