2010-03-18 15:23:17

Medjugorje குறித்த நிகழ்வுகளைத் தீர ஆராய்வதற்கு ஒரு குழுவை திருப்பீடம் உருவாக்கியுள்ளது


மார்ச்18,2010 Medjugorje குறித்த நிகழ்வுகளைத் தீர ஆராய்வதற்கு ஒரு குழுவை உருவாக்கியுள்ளதாக திருப்பீடத்திலிருந்து வெளியான செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாடுகளுக்கான பேராயத்தின் கீழ், கர்தினால் Camillo Ruini தலைமையில் பன்னாட்டினரையும் உள்ளடக்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளதென்றும், கர்தினால்கள், ஆயர்கள் அடங்கிய இந்தக் குழு மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளின் முடிவு இந்த பேராயத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் திருப்பீட பேச்சாளர் இயேசு சபை குரு Federico Lombardi செய்தியாளர்களிடம் கூறினார்.Medjugorje குறித்த நிகழ்வுகள் ஒரு குறுகிய இடத்தில், ஒரு மறைமாவட்ட அளவில் ஆரம்பமான போதிலும், தற்போது பல இடங்களில் இது பிரபலமாகி வருவதால், Bosnia, Herzegovina ஆயர்களின் விருப்பத்தின் பேரில் இந்த பரிசீலனைக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அருட்தந்தை Lombardi கூறினார்.







All the contents on this site are copyrighted ©.