ஆயிரமாம் ஆண்டிற்கான மனித மேமபாட்டுத்திட்டங்கள்எதிர்பார்த்த
அளவு நிறைவேற்றப்படவில்லை - ஐ.நா.தலைமைச் செயலர்Ban Ki-moon
மார்ச்17,2010 இந்த ஆயிரமாம் ஆண்டிற்கான மனித மேமபாட்டுத் திட்டங்கள் நிறைவேற குறிக்கப்பட்ட 2015ஆம்
ஆண்டு வருவதற்கு இன்னும் ஐந்தே ஆண்டுகள் உள்ள நிலையில், மேம்பாட்டுத் திட்டங்கள் எதிர்பார்த்த
அளவு நிறைவேற்றப்படவில்லை என்று ஐ.நா. தலைமைச் செயலர் Ban Ki-moon கூறியுள்ளார். அண்மையில்
உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவால் பல பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டாலும், நாம்
குறித்துள்ள 2015ஆம் ஆண்டிற்குள் நாம் குறித்த இலக்குகளை அடைய முடியும் என்றும் அவர்
கூறினார். ஏற்கனவே நாடுகள் எடுத்துக் கொண்ட உறுதிகளைச் செயல் படுத்தினாலே நம் இலக்குகளை
அடைய முடியும் என்றும், இதற்காக இன்னும் புதிய நிதிகளை ஒதுக்கத் தேவையில்லை என்றும் ஐ.நா.
தலைமைச் செயலர் எடுத்துரைத்துள்ளார்.இத்திட்டங்களை குறித்த உச்சி மாநாடு ஒன்று வருகிற
செப்டெம்பரில் நியூ யார்க் நகரில் நடைபெறும் என்று கூறிய Ban அந்த மாநாட்டின் போது ஆயிரமாம்
ஆண்டிற்கான திட்டங்கள் மீண்டும் மறு பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறினார்.