நாட்டின் அமைதிக்காக ஜெபிக்குமாறு பாகிஸ்தான் கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது
தலத்திருச்சபை.
மார்ச் 16, 2010. பாகிஸ்தானில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில்
60 பேர் இறந்தது மற்றும் 100பேர் காயமடைந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள
தலத்திருச்சபை, நாட்டின் அமைதிக்காக ஜெபிக்குமாறு பாகிஸ்தான் கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு
விடுத்துள்ளது.
அப்பாவி மக்கள் வன்முறைச் செயல்களுக்குப் பலியாவது தொடர்வதாகவும்
இவ்வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதில் அரசு விருப்பமின்றி செயல்படுவதுடன் ,பழியை வெளிநாடுகளின்
மீது போட்டு தப்பிக்க முயல்வதாகவும் குறை கூறினார் கத்தோலிக்கத் துறவு சபைகளின் கூட்டமைப்பின்
அதிகாரி குரு. அபிட் ஹாபித்.
வன்செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகள் தங்கள் பாதையை
மாற்றி, பிரச்னைகளுக்கு அமைதியான வழிகளில் தீர்வு காண முன் வரவேண்டும் என அழைப்புவிடுத்தார்
கப்புச்சின் சபை குருவான அவர்.