2010-03-16 14:52:59

சைன கர்தினால் இக்னேசியஸ் குங் பின்மேய் சைன ஆயர்களுக்கான சிறந்த எடுத்துக்காட்டு.


மார்ச் 16, 2010. சைன கர்தினால் இக்னேசியஸ் குங் பின்மேய் இறந்து 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் அவரின் வாழ்வு இன்றைய சைன ஆயர்களுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளதாக அறிவித்தார் அந்நாட்டு கர்தினால் ஜோசப் சென் சேகியுன்.

சைன ஆயர்களுள் சிலர் ஏற்கனவே தங்களை கத்தோலிக்க திருச்சபையில் முழுமையாக இணைத்துக் கொண்டுள்ள போதிலும், இன்னும் சிலர், அரசின் அழுத்தங்களாலும் பல்வேறு சோதனைகளாலும் இன்னும் தடுமாறிக்கொண்டிருப்பதாக உரைத்த கர்தினால், திருத்தந்தையுடனான விசுவாச ஒன்றிப்பை விட்டுக் கொடுக்க மறுத்ததற்காக 30 ஆண்டு சிறை வாசத்தை அனுபவித்த கர்தினால் குங்கின் எடுத்துக்காட்டு இதில் அவர்களுக்கு உதவுவதாக என்றார்.

சைனக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கத்தொலிக்க சபையின் ஆயர்களின் துன்ப நிலைகளை புரிந்து கொண்டு அவர்களுக்காக விசுவாசிகள் ஜெபிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன் வைத்தார் ஹாங்காங்கின் முன்னாள் ஆயர் கர்தினால் சென்.








All the contents on this site are copyrighted ©.