2010-03-15 14:50:33

மத்திய பிரதேசத்தில் பேராலயத்தைத் தாக்க வந்த இந்து தீவிரவாதிகளைக் காவல் துறை தடுத்து நிறுத்தியுள்ளது


மார்ச்15,2010 மத்திய பிரதேசத்தின் Satna நகர் புனித வின்சென்ட் பேராலயத்தைத் தாக்க வந்த ஏறத்தாழ 60 இந்து தீவிரவாதிகளைக் காவல் துறை தடுத்து நிறுத்தியுள்ளது குறித்து திருப்தியை வெளியிட்டுள்ளது தலத் திருச்சபை.
மத்திய பிரதேசத்தில் கட்டாய மத மாற்றங்கள் இடம் பெறுகின்றன என்ற குற்றச்சாட்டின் பேரில், தலத் திருச்சபை அதிகாரிகளின் உருவ பொம்மைகளைப் பேராலயத்தினுள் எரிக்கத் திட்டமிட்டு, அப்பொம்மைகளை சவ ஊர்வலம் போல் கொண்டு வந்த குழுவானது, காவல் துறை தடுத்ததைத் தொடர்ந்து உருவ பொம்மை ஒன்றை கோவிலுக்கு வெளியே எரித்து விட்டு, கலைந்த சென்றது.VHP மற்றும்  Bajrang Dal குழுவால் கோவிலினுள் அத்து மீறி நுழையும் செயல் இடம் பெறும் என சில பத்திரிகைகள் ஏற்கனவே எச்சரிக்கைச் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.