2010-03-15 14:51:11

இணையதளப் பயன்பாடுகளால் திருமண வாழ்வில் பல்வேறு பிரச்சனைகள். – அயர்லாந்து திருச்சபை கவலை


மார்ச்15,2010 இன்றைய உலகில் இணையதளப் பயன்பாடுகளால் திருமண வாழ்வில் பல்வேறு பிரச்சனைகள் எதிர்நோக்கப்படுவதாக அயர்லாந்து திருச்சபை ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
அலுவலக வேலையை வீட்டிற்கு கொணர்தல், இணைய தளத்தில் விளையாடுதல், பாலின நடவடிக்கைகளில் இணையதளம் வழி ஈடுபடுதல், சூதாட்டம் போன்றவைகளால் தம்பதியரிடையே பிரச்சனைகள் ஏற்படுவதைக் கடந்த சில ஆண்டுகளாக காண முடிகிறது என்றார் அயர்லாந்து தலத் திருச்சபையின் வழிகாட்டுதல் ஆலோசனைகளுக்கான அதிகாரி Liam Lally. குடும்பங்களுடன் செலவிட வேண்டிய நேரம், இணையதளங்களில் செலவழிக்கப் படுவதால், இந்நிலை ஏற்படுவதாகக் கூறினார் அவர்.







All the contents on this site are copyrighted ©.